குரு, புதன், சுக்கிரன்,கேது நன்மையை வழங்குவர். ஆலங்குடிகுரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.அசுவினி: கடந்த வார நெருக்கடி விலகும். உங்கள் திறமை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்ப்பு காணாமல் போகும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.பரணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் தேவை பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலர் புதிய வாகனம், சொத்து வாங்குவீர். குரு பகவானின் பார்வைகளால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். அரசு பணியில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1ம் பாதம்: தன ஸ்தானத்தில் குரு, செவ்வாய், பூர்வ புண்ணியாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். வியாபாரம், தொழிலில் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.